ஒளி விளக்குகளால் அழகு பெற்ற வல்வெட்டித்துறை
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதனை முன்னிட்டு வல்வை மக்களால் இந்திர விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆலயத்தை சூழவுள்ள சுமார் 3 கிலோமீற்றர் தூர வீதி மின் விளக்குகள், சேடனைகள், இந்து தெய்வங்களின் பாரிய பதாகைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட மேடைகள் அமைக்கப்பட்டு பட்டிமன்றம் இசை நடன நிகழ்வுகள் மற்றும் இசைக்கச்சேரி என்பனவும் இடம்பெற்றது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed