ஒளி விளக்குகளால் அழகு பெற்ற வல்வெட்டித்துறை

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.  அதனை முன்னிட்டு வல்வை மக்களால் இந்திர விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆலயத்தை சூழவுள்ள சுமார் 3 கிலோமீற்றர் தூர வீதி மின் விளக்குகள், சேடனைகள், இந்து தெய்வங்களின் பாரிய பதாகைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.  அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட மேடைகள் அமைக்கப்பட்டு பட்டிமன்றம் இசை நடன நிகழ்வுகள் மற்றும் இசைக்கச்சேரி என்பனவும் இடம்பெற்றது.